என்னோடு நீ...
என்றோ
என் சிறையிலிட்ட
உன் நினைவுகளின்று..
துரு கண்ட கம்பிகள்..
தானாய் வளைந்ததில்..
சுதந்திர பறவையாய்..
ஸ்வாசிக்க பறந்தன..!
உன் கண் நோக்கியதில்..
உள் நூறு சலனங்கள்..
மறந்தவை மகிழ்வோடு
பறந்தன சிறகடித்து..!
உன் நினைவுறங்கும் ஹ்ருதயம்..
உன் கைத் தணலில் என் விரல்கள்..
சேருமிடம் சேராது..
சென்ற வழி தோறும்..
நம் காலச் சுவட்டின்..
ஜோடிப் பாதமிரண்டை..
தளிர் நடை அலைகள்..
தயங்காது முத்தமிடும்..!
மணல்கள் பூவாய்..
தென்றலின் உதவி கொண்டு..!
பூஜைக்கு நேரமென்ன?
என்னில் நீ இருக்கையிலே..!
No comments:
Post a Comment