Thursday 31 January 2013

தமிழ் தாய்

எழுந்ததும் வந்தாள் எனை நோக்கி
அவள் கண்கள் இரண்டையும் அனலாக்கி
அவள் கொண்ட பார்வையோ அனலாக
நான் நின்ற நிலையோ சிலையாக
வந்தது சிற்பமா? அல்ல
என் உயிர் போனது அற்பமா மெல்ல!
கொண்ட நிலை தெரியாது
வந்த நிலை புரியாது
மெல்லமாய் வினவினேன் அவளை
செல்லமாய் குலவினாள் அவளோ!
நிந்தன் தமிழ் பற்று கண்டு வந்த
தங்க தமிழ் தாயே நானென்று!

No comments:

Post a Comment